guat094304 
உலகம்

கௌதமாலா: 5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது. 

DIN

கௌதமாலா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 3,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,00,840-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 76 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12,544-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கௌதமாலாவில் 4,41,446 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 46,850 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT