இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள்: சொன்னது? 
உலகம்

இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள்: சொன்னது?

இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

DIN


இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் வெள்ளிக்கிழமை மாலை தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு பேசிய கோபால் பாக்லே இவ்வாறு கூறினார். இலங்கையில் வாழும் முஸ்லிம் தலைவர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர்.

விருந்தினர்களில், இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, வங்கதேசத்துக்கான இலங்கை தூதர் தாரேக் மொஹம்மது அரிஃபுல் இஸ்லாம் மற்றும் அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் என ஏராளமானோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர் நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வெகு காலமாக உதவிகளை பரிமாறிக் கொள்கிறோம். இலங்கைக்கு அனைத்து வகையிலும் இந்தியா தொடர்ந்து உதவும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT