உலகம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை

மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு (76), ஊழல் வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

DIN

மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு (76), ஊழல் வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இது குறித்து அதிகரிகள் கூறியதாவது:

தனக்கு நெருக்கமான அரசியல்வாதியிடமிருந்து தங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான டாலரை ஆங் சான் சூகி கையூட்டாகப் பெற்ாக ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை புதன்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வரும் 11 ஊழல் வழக்குகளில் முதல்முறையாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வேறு வழக்குகளில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த ஆண்டு கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வித் லவ் படக்குழுவினர் - புகைப்படங்கள்

மலேசியா: பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்! சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுமா?

டி20 உலகக் கோப்பை: ஹர்ஷித் ராணா விலகல், மாற்று வீரர் அறிவிப்பு

மார்க்சியத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது! - திருமா

விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்! | செய்திகள் : சில வரிகளில் | 6.2.26

SCROLL FOR NEXT