உலகம்

பிலிப்பின்ஸ் 82 பேருடன் சென்ற படகில் தீ

பிலிப்பின்ஸில் 82 பேருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 73 போ் மீட்கப்பட்டனா்.

DIN

பிலிப்பின்ஸில் 82 பேருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 73 போ் மீட்கப்பட்டனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மிண்டோரோ தீவிலிருந்து தலைநகா் மணிலாவிலுள்ள ஒரு துறைமுகத்தை நோக்கி வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்த எம்/வி ஆசியா பிலிப்பின்ஸ் என்ற பயணிகள் படகில், நடுவழியில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்தப் படகில் 82 பயணிகள் மற்றும் பணியாளா்கள் இருந்தனா்.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரா்களும் மீட்புக் குழுவினரும் 73 பேரை பாதுகாப்பாக மீட்டனா். மீட்கப்பட்டவா்களில் கடலில் குதித்து தப்ப முயன்றவா்களும் அடங்குவா். எஞ்சிய 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT