"ஆசியாவின் நோபல் பரிசு' என்றழைக்கப்படும் பிலிப்பின்ஸின் மகசேசே விருதுக்காக, கம்போடியாவில் அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனநல மருத்துவர் சொதியாரா சிம் (54), வன்கொடுமைக்குள்ளான ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உதவிய பிலிப்பின்ஸ் மருத்துவர் பெர்னடெட் மேட்ரிட் (64) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.