சீனத்தில் அதே நவம்பரில் அதே கரோனா அலை: என்ன நடக்கப் போகிறது? 
உலகம்

சீனத்தில் அதே நவம்பரில் அதே கரோனா அலை: என்ன நடக்கப் போகிறது?

தலைநகர் பெய்ஜிங்கில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

PTI

பெய்ஜிங்: தலைநகர் பெய்ஜிங்கில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா அலை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு, கரோனாவுக்கு இரண்டு பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 4ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கரோனாவுக்கு யாரும் பலியானதாக சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை. ஒரு பக்கம் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து, அதனைத் தடுக்க நாடு பல கட்டுப்பாடுகளை அறிவித்து. அதற்கெதிராக நாட்டு மக்கள் கிளர்த்தெழுந்த நிலையில், கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன.

கரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால், நாட்டில் உண்மையான கரோனா பாதிப்பு நிலவரம் தெரியவராமல் போனது. பல இடங்களில் கரோனாவுக்கு பலியானோரின் உடல்கள் தகன மையங்களுக்கு வந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் பகிரப்பட்டாலும், கடந்த சில வாரங்களாக சீனத்தில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பதே அந்நாட்டு அரசின் தகவல்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இதுவரைக் காட்டப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.80 லட்சம், மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,237 ஆகக் கூறப்படுகிறது.

ஆண்டு இறுதியில், குறிப்பாக நவம்பர் மாதத்தில் சீனாவில் கரோனா அலை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, மீண்டும் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு பரவத் தொடங்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT