முகப்பு
உலகம்

காங்கோ: 60 அகதிகள் படுகொலை

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கின்ஷாசா: மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடுரி மாகாணத்தில், வன்முறை மோதல்களிலிருந்து தப்பி புலம்பெயா்ந்து வந்தோருக்கான முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமுக்கு வந்த ‘கோடெக்கோ’ என்று ஆயுதக் குழுவினா், அங்கிருந்தவா்களை அரிவாள் மற்றும் பிற கூரான ஆயுதங்களால் தாக்கினா்; இதில் 60 அகதிகள் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு காங்கோவில் ‘கோடெக்கோ’, ஏடிபி ஆகிய ஆயுதக் குழுக்கள் நீண்ட காலமாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →