உலகம்

யேமன்சவூதி வான்வழித் தாக்குதல்:கைதிகள் பலி 82-ஆக உயா்வு

யேமன் சிறையில் சவூதி கூட்டுப் படை வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

DIN

யேமன் சிறையில் சவூதி கூட்டுப் படை வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஹூதி கிளா்ச்சியாளா்களும் தொண்டு அமைப்பினரும் சனிக்கிழமை கூறியதாவது:

சாடா மாகாண சிறைச் சாலையில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்த மேலும் 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, அந்தத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

யேமனில் சவூதி அரேபிய ஆதரவு பெற்ற அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான படையினருக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா் மீது சவூதி கூட்டுப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

SCROLL FOR NEXT