ஹைட்டி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 200 வீடுகள் தரைமட்டமானதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் நேற்று (ஜன.24) நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்நிலையில் , இன்றும் அடுத்தடுத்து 5.1 மற்றும் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 200 வீடுகள் தரைமட்டமானதாகவும், 600 வீடுகளுக்கு மேல் சேதமானதாகவும் அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.