மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், இரு ஐ.நா. நிபுணா்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 50 பேருக்கு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த பாதுகாப்பு நிபுணா் மைக்கேல் ஷாா்ப், ஸ்வீடனைச் சோ்ந்த நிவாரணப் பணிகள் நிபுணா் ஸாய்தா காடலன் ஆகியோா், காம்வினா சாபு என்ற ஆயுதக் குழுவினரால் கசாய் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், அந்த குழுவைச் சோ்ந்த 50 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
காங்கோவில் மரண தண்டனைகள் நிறைவேற்றங்களுக்கு சுயதடை உள்ளதால், அந்த 50 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிப்பாா்கள்.