கோப்புப் படம் 
உலகம்

ஆஸ்திரேலியா: உச்சத்தை தொடும் கரோனா பாதிப்புகள்

ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி கரோனா பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை திங்கள் கிழமை 5433 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரியில் 5390 ஆக இருந்த்தது. 

குளிர் காலம் தொடங்க இருப்பதால் அடுத்த வாரங்களில் இன்னும் பாதிப்புகள் அதிகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளின் மீது பெரிய அழுத்ததை ஏற்படுத்துமென தகவல் சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மருத்துவக்குழுவின் துணைத்தலைவர் கிரிஸ் மோய்,  “கரோனா பாதிப்புகள் புதிய  உச்சத்தை தொடும்” எனக் கூறியுள்ளார். 
 
இறுதியாக வந்த தகவலின்படி திங்கள் கிழமை மதியம் மொத்த கரோனா பாதிப்புகள் 9,139,047. இதில் 11,200 மரணங்களும் அடங்கும். செவ்வாய்கிழமை புதியதாக 40,000 கரோனா பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 90க்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை எண்ணிக்கைகள் இல்லை எனவும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

8 மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவி

சிறுவனிடம் பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் கைது

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

கருப்புக் கொடியேந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT