உக்ரைனில் குண்டுமழை: அதிர்ச்சி விடியோ
உக்ரைனின் முக்கிய நகரத்தில் ரஷியா குண்டுமழை பொழிந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைனின் முக்கிய நகரத்தில் ரஷியா குண்டுமழை பொழிந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 150 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. போரால் உக்ரைன் கடுமையான இழப்புகளையும் சேதாரங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் பல முக்கிய நகரங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் சீரழிவைச் சந்தித்து வருகின்றன.
இதற்கிடையே, போர் சூழல் காரணமாக இருநாட்டு அரசியலிலும் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | போரில் இதுவரை 38 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் தகவல்
இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் திங்கள்கிழமை அதிகாலை ரஷியப் படையினர் எரியும் தீபந்து போன்ற குண்டுகளை வீசியுள்ளனர். நெருப்புடன் தரையை நோக்கி வரும் அக்குண்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.