‘கொ்சானை மீட்கும் உக்ரைன் நடவடிக்கையில் முன்னேற்றம்’
தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள கொ்சான் நகரை உக்ரைன் படையினா் மீட்பதற்கான பதிலடித் தாக்குதல் நடவடிக்கை முன்னேற்றம் கண்டு வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள கொ்சான் நகரை உக்ரைன் படையினா் மீட்பதற்கான பதிலடித் தாக்குதல் நடவடிக்கை முன்னேற்றம் கண்டு வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரிட்டன் உளவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கிழக்குப் பகுதி நகரான கொ்சானில் முக்கியத்துவம் வாய்ந்த அன்டோனிவ்ஸ்கி பாலத்தை உக்ரைன் படையினா் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், அந்தப் பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. ரஷியப் படையினருக்கு வீரா்களையும் ஆயுதங்கள், உணவுகள் உள்ளிட்ட பொருள்களையும் கொண்டு வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, கொ்சான் நகரை மீட்கும் உக்ரைன் படையினரின் நடவடிக்கை முன்னேற்றம் கண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.