உலகம்

‘ஆங் சான் சூகிக்கு எதிரானஊழல் வழக்கு தொடரலாம்’

DIN

மியான்மரின் முன்னாள் அரசு தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை தொடரலாம் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஆங் சான் சூகிக்கு எதிராக அரசுத் தரப்பில் போதுமான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு அவரை வீட்டுக் காவலில் வைத்த ராணுவ ஆட்சியாளா்கள், ஆங் சான் சூகி மீது பல்வேறு முறைகேடு வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். அதில் அவருக்கு ஏற்கெனவே 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT