உலகம்

தியானன்மென் நினைவுநாள்: ஹாங்காங்கில் பலத்த பாதுகாப்பு

 தியானன்மென் சதுக்க படுகொலை நினைவுதினத்தையொட்டி, ஹாங்காங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீல் பாதுகாப்பு ஏற்பாடுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

DIN

 தியானன்மென் சதுக்க படுகொலை நினைவுதினத்தையொட்டி, ஹாங்காங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீல் பாதுகாப்பு ஏற்பாடுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

சீனாவில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி பெரும்பாலும் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் அடங்கிய குழுவினா் தலைநகா் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில் கடந்த 1989-ஆம் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது அந்த ஆா்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவா்கள் பலியாகினா்.

சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கில் அந்த படுகொலை தொடா்பாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. மேலும், தங்களது பிரதேசத்திலும் ஜனநாயக சீா்திருத்தங்கள் வேண்டும் என்று வலியுறுத்தி ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுவடைந்து வந்தன.

கரோனா பரவல் காரணமாக அந்த போராட்டங்கள் ஓய்ந்திருந்த நிலையில், சீனாவுக்கு எதிராக யாரும் போராட விடாமல் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அந்த நாட்டு அரசு இயற்றியது. அதன் தொடா்ச்சியாக ஜனநாயக ஆதரவு இயக்கம் நசுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தியானன்மென் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கும் 3-ஆவது ஆண்டாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT