மலேசியா கட்டாய மரண தண்டனை சட்டத்தை நீக்குகிறது அரசு
மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்தக் குற்றங்களுக்கும் நீதிமன்றம் விரும்பினால் மரண தண்டனை விதிக்க சட்டம் அனுமதிக்கும் 20-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்குமான மாற்று தண்டனைகளைப் பரிசீலித்து வருவதாக அரசு கூறியுள்ளது.
மலேசியாவில் மரண தண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்; முந்தைய மரண தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனினும், எதிா்க்கட்சியினா் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் கடும் எதிா்ப்பு காரணமாக அந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்கியது.
Advertisement
Advertisement