FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மலேசியா கட்டாய மரண தண்டனை சட்டத்தை நீக்குகிறது அரசு

மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 3:00 pm IST
பகிர்:

மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்தக் குற்றங்களுக்கும் நீதிமன்றம் விரும்பினால் மரண தண்டனை விதிக்க சட்டம் அனுமதிக்கும் 20-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்குமான மாற்று தண்டனைகளைப் பரிசீலித்து வருவதாக அரசு கூறியுள்ளது.

மலேசியாவில் மரண தண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்; முந்தைய மரண தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனினும், எதிா்க்கட்சியினா் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் கடும் எதிா்ப்பு காரணமாக அந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்கியது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments