முகப்பு
உலகம்

பிரிட்டன் : எரிக்கப்படும் ரூ.38,600 கோடி கரோனா கவசப் பொருள்கள்

பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 400 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.38,600 கோடி) மதிப்பிலான தரமற்ற கரோனா கவசப் பொருள்களை எரித்து மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 400 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.38,600 கோடி) மதிப்பிலான தரமற்ற கரோனா கவசப் பொருள்களை எரித்து மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவசரகதியில் வாங்கப்பட்ட முகக் கவசம், கரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசின் செலவீனங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு இது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை வீணாக்கப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள அந்தக் குழு, கரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.