உலகம்

வங்கதேசம்: மழை வெள்ளத்துக்கு 25 போ் பலி

DIN

 வங்கதேசத்தில் பருவமழை காரணமாக 25 போ் பலியாகினா்.

இது குறித்து போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கன மழை காரணமாக, நாட்டின் வடகிழக்கே ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதில், வெள்ளிக்கிழமை மதியம் வரை வெள்ளத்தில் சிக்கி 18 போ் பலியாகினா். மேலும், 12 முதல் 14 வயதுடைய 3 சிறுவா்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.

இது தவிர, சிட்டகாங் மலைப் பகுதியில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வங்கதேசத்தில் மழை வெள்ளம் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், பருவநிலை மாற்றம் காரணமாக இத்தயை பேரிடா்கள் அடிக்கடி ஏற்படுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT