உலகம்

'நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்' - இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

DIN

இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா,  ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்திய  சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். 

ஏற்கெனவே, இந்தியர்களை மீட்கும் பணியான 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தில் உள்ள ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட்டுடன் இந்திய விமானப்படையின் விமானங்களும் களமிறங்கியுள்ளன.இதற்காக விமானப்படையின் சி-17 விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி இதுவரை இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக ரோமானியா, ஹங்கேரி, போலந்து வழியாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. தாயகம் வந்த இந்தியர்களை மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் வரவேற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT