முகப்பு
உலகம்

உக்ரைன் போர்: சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்களை தாக்கி வருகின்றன. இதில், சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

ரஷியாவின் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த உத்தரவிட கோரி உக்ரைன் தரப்பில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் இன்று விசாரிக்க தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.