உலகம்

கீவ் புறநகர்ப் பகுதிகளில் குண்டு மழை பொழியும் ரஷிய படைகள்

DIN


உக்ரைன் மீது படையெடுத்து கடுமையான போரை நடத்தி வரும் ரஷிய படைகள், கீவ் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளை குறி வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு முழுக்க கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு கீவ் நகரின் ப்ரோவெரி பகுதி கவுன்சிலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக மண்டல தலைமை நிர்வாகி ஒலெக்சி குலேபா உக்ரைன் நாட்டுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு நகரப் பகுதிகளான இர்பின், புச்சா, ஹேஸ்டோமெல் ஆகியவற்றின் மீது நள்ளிரவு முழுக்க தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருவதால்தான் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT