கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடு 
உலகம்

கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடு

கரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

PTI


இஸ்லாமாபாத்: கரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருமணம், உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சந்தைகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளுக்கும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேவேளையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கிக் கொள்ளப்படுவதால், கரோனா பேரிடர் முடிந்துவிட்டதாக அர்த்தமாகாது, அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, சூழ்நிலைக்கு ஏற்ப மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT