முகப்பு
உலகம்

இந்தியா வரவிருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னடுக்கு (50) திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
இந்தியா வரவிருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா
பகிர்:

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னடுக்கு (50) திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டுகால ராஜீய ரீதியிலான உறவைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவிருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமா் நஃப்டாலி பென்னடுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலிருந்தே பணியாற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற அவா், அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வருகைதரவிருந்தார்.

இஸ்ரேல் பிரதமா் ஏப்.2-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →