FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது: ரஷியா

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வடக்கு உக்ரைனான கீவ் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.

Updated On : 29 மார்ச் 2022, 8:33 pm IST
விலாதிமீர் மிடின்ஸ்கி (வலது)
பகிர்:

உக்ரைனுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வடக்கு உக்ரைனான கீவ் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கியிலுள்ள இஸ்தான்புல் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷிய தரப்பிலிருந்தும் துருக்கி தரப்பிலிருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய தரப்பு பேச்சுவார்த்தைகான குழுவைச் சேர்ந்த விலாதிமீர் மிடின்ஸ்கி, உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சு நடைபெற்றது. உக்ரைனின் கோரிக்கைகள் குறித்து அதிபர் விளாதிமீர் புதினுடம் ஆலோசிக்கப்படும் என்று கூறினார். 

உக்ரைன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து 
சர்வதேச ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments