உலகம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான்

DIN

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 2020 மே மாதத்தில் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்குப் பிறகு இந்தப் பதவிப் பொறுப்பு நிரப்பப்படாமலேயே இருந்தது.

தற்போது,  கோட்டகல தலைமையகத்தில் புதன்கிழமை  கூடிய கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்தவர் செந்தில் தொண்டமான்.

மேலும், கட்சியின் அவைத் தலைவர் மற்றும் பொருளாளராக எம். ராமேசுவரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிக மோசமான பொருளாதாரச் சூழலை இலங்கை கடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பது குறிப்பிடத் தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

கேரளத்தில் தீவிரமடையும் மழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது... என்ன சொல்கிறார் விராட் கோலி? (விடியோ)

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

SCROLL FOR NEXT