உலகம்

‘நேட்டோவில் ஃபின்லாந்து, ஸ்வீடன்இணைய அனுமதிக்க மாட்டோம்’

DIN

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப் போவதில்லை என்று துருக்கி அதிபா் எா்டோகன் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் எா்டோகன் திங்கள்கிழமை கூறியதாவது:

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது. காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு புகலிடம் அளித்து வருகின்றன.

மேலும், நேட்டோவில் இணைவதற்காக எந்தவொரு நாடும் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதை ஏற்கமாட்டோம் என்றாா் அவா்.

துருக்கிக்கு எதிராக பல்வேறு ஐரேப்பிய நாடுகள் ஆயுத வா்த்தகத் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT