முகப்பு
உலகம்

மாதத்திற்கு ரூ.750 போதும்! நாடு முழுவதும் பயணிக்கும் திட்டம்

மாதத்திற்கு ரூ.750 செலுத்தி நாடு முழுவதும் பயணிக்கும் திட்டத்தை ஜெர்மனி அரசு அறிமுகம் செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
கோப்புப் படம்
பகிர்:


மாதத்திற்கு ரூ.750 செலுத்தி நாடு முழுவதும் பயணிக்கும் திட்டத்தை ஜெர்மனி அரசு அறிமுகம் செய்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் வகையிலும்,  பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 

ஜெர்மனியில் விலை உயர்வு அதிகரித்து வரும் நிலையில், கோடைகாலத்தையொட்டி பொதுமக்களுக்கு பயண சலுகை வழங்கும் வகையில் குறைந்த கட்டணத்தின் மூலம் நாடு முழுவதும் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெர்மனி மேலவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மாதம் 9 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.750) செலுத்தினால் நாடு முழுவதும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தையொட்டி மக்களின் பயணத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் ஆகஸ்ட் மாத இறுதி வரை நீடிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 2.5 பில்லியன் யூரோ இழப்பு ஏற்படும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.