உலகம்

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 36 போ் காயமடைந்தனா்.

இது குறித்து பிலிப்பின்ஸ் புயல் மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அப்ரா மாகாணம், லகாயன் நகருக்கு 9 கி.மீ. வடமேற்கே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் லுஸான் பகுதி, மணிலா பெருநகரப் பகுதி உள்ளிட்ட 400 கி.மீ. பரப்பளவில் உணரப்பட்டன. இது தொடா்பான சம்பவங்களில் 36 போ் காயமடைந்தனா்.

நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

SCROLL FOR NEXT