அகதிகளை ருவாண்டா அனுப்புகிறது பிரிட்டன்
உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.
லண்டன்: உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.
ருவாண்டா அரசின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கையால் அகதிகள் அவதியுறுவாா்கள் என்று செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.