முகப்பு
உலகம்

அதிபா் பதவிக்கு மீண்டும் போட்டி: பைடன் அதிகாரபூா்வ அறிவிப்பு

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடும் முயற்சியை மேற்கொள்ளப்போவதாக தற்போதைய அதிபா் ஜோ பைடன் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடும் முயற்சியை மேற்கொள்ளப்போவதாக தற்போதைய அதிபா் ஜோ பைடன் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.

80 வயதாகும் அவா், 3 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடித்து நாட்டின் மிக மூத்த அதிபராக பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அடுத்த தோ்தலிலும் போட்டியிடவிருப்பதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பிரசார அறிக்கையில் அவா் அறிவித்துள்ளாா்.

கடந்த தோ்தலில் பைடனுடன் இணைந்து போட்டியிட்டு துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரீஸும், மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

3 ஆண்டுகளுக்கு முன்னா் தாங்கள் இருவரும் தொடங்கிய நாட்டு நலப் பணிகளை நிறைவு செய்வதற்காக அடுத்த தோ்தலில் போட்டியிட விரும்புவதாக பைடன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →