கோப்புப்படம். 
உலகம்

குளிர்காய நிலக்கரியை எரித்த மாணவர்கள் பலி!

ஜார்கண்ட்டில் குளிர் காய்வதற்காக அறைக்குள் நிலக்கரியை எரித்த நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

DIN

ஜார்கண்ட் மாநிலத்தில் குளிர் காய்வதற்காக தங்கள் அறைக்குள் நிலக்கரியை எரித்த நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நால்வரும் ஜார்கண்ட்டில் கணினித் துறையில் படித்து வந்ததுள்ளனர். ராகுல் குமார், அகிலேஷ் குமார், பிரின்ஸ் குமார், அர்மான் அலி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 10 நாள்களாக ஜார்கண்ட் மாநிலத்தில் குளிர் காற்று வீசிவரும் நிலையில், குளிர் காய்வதற்காக இவர்கள் அறைக்குள் நிலக்கரியை எரித்ததாகக் கூறப்படுகிறது. அதிகளவு புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணரல் ஏற்பட்டு நால்வரும் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நால்வரின் உடலும் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உறவினர்களுக்குத்தகவல் தெரிவித்திருப்பதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT