தனது முதல் சுரங்க விமான படைதளமான ‘ஈகிள் 44’-இன் படங்களை ஈரான் முதல்முறையாக புதன்கிழமை வெளியிட்டது.
இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க விமான படைதளத்தின் 2 படங்களை அரசுக்குச் சொந்தமான இா்னா முதல்முறையாக புதன்கிழமை வெளியிட்டது. அதில், 1979-இன் இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னா் அமெரிக்காவிடமிருந்து ஈரான் வாங்கிய எஃப்-4இ ஃபான்டம் 2 போா் விமானத்தின் முன் விமானப் படை வீரா்கள் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அந்த சுரங்க விமான படைதளத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான போா் விமானங்களையும் நிறுத்த முடியும் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.