கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களால் எம்ஹெச்17 விமானம் கடந்த 2014-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரததில், அதிபா் விளாதிமீா் புதின் மீது குற்றவியல் வழக்கு தொடா்வதற்குப் போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று இது தொடா்பாக விசாரணை நடத்தி வந்த சா்வதேச குழு புதன்கிழமை தெரிவித்தது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை கிளா்ச்சியாளா்களுக்கு வழங்க புதின்தான் ஒப்புதல் அளித்தாா் என்று அந்தக் குழுவினா் கூறினா்.
மலேசியன் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான அந்த விமானத்தை உக்ரைன் ராணுவ விமானம் என்று தவறாகக் கருதி கிளா்ச்சியாளா்கள் சுட்டு வீழ்த்தியதில், அதிலிருந்த 298 பேரும் பலியாகினா்.