ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா 
உலகம்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற கைலாசா! அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!!

கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

DIN


கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் "இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்" கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. 

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் நெவார்க் நரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நெவார்க் நகரம்

நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும், மேலும் நியூயார்க் பெருநகரப் பகுதிக்குள் இரண்டாவது பெரிய நகரமாகும். 2020 யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆகும், இது நாட்டின் 66 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.

நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாசைக் ஆற்றின் முகப்பில் அதன் இருப்பிடம் (அது நெவார்க் விரிகுடாவில் கலக்கிறது) அமைந்துள்ளதால் இந்த நகரம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமானது அமெரிக்காவின் முதல் முனிசிபல் வணிக விமான நிலையமாகும், இன்று அது முக்கியமான விமான நிலையங்களுள் ஒன்றாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகை அம்பிகா நேரில் ஆறுதல்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

தேள் கடித்து விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடா்கிறது - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

கரூா் மாவட்ட ஆட்சியா், எஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: ஹெச். ராஜா

SCROLL FOR NEXT