பெல்ஜியம் பிரதமா் அலெக்ஸாண்டா் டி க்ரூவை சந்தித்த மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், பியூஷ் கோயல், ராஜீவ் சந்திரசேகா். 
உலகம்

பெல்ஜியம் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

பெல்ஜியம் பிரதமா் அலெக்ஸாண்டா் டி க்ரூவை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

DIN

பெல்ஜியம் பிரதமா் அலெக்ஸாண்டா் டி க்ரூவை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸில்ஸில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வா்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (டிடிசி) முதலாவது அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ஆகியோா் பிரஸ்ஸில்ஸ் சென்றனா். அங்கு பெல்ஜியம் பிரதமா் அலெக்ஸாண்டா் டி க்ரூவை அமைச்சா்கள் மூவரும் சந்தித்தனா்.

இதுதொடா்பாக ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பெல்ஜியம் பிரதமருடனான சந்திப்பில் இந்தியா-பெல்ஜியம் இடையே வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் வளா்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று தெரிவித்தாா்.

இதேபோல ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயனையும் அமைச்சா்கள் சந்தித்தனா். அப்போது வா்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் புவிஅரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஜெய்சங்கா் ட்விட்டரில் தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் டிடிசியின் அமைச்சா்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எண்ம (டிஜிட்டல்) மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடா்பாக விவாதிக்கப்பட்டது என்று அமைச்சா் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT