முகப்பு
உலகம்

சீனா முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

சீனா முன்னாள் பிரதமர் லீ கெகியாங்(68) வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் காலமானார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

பெய்ஜிங் (சீனா): சீனா முன்னாள் பிரதமர் லீ கெகியாங்(68) வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் காலமானார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக்களின் அரசியல் பணியகத்தின் நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான லீ கெகியாங் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

லீ கெகியாங் பத்து ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியுள்ளார். பிரதமராக இருந்த காலத்தில் தனது கடினமான தருணத்தில் சக ஊழியர்களுடனும் ஒரு நவீன துறைசார் நபராக வலம் வந்தார். சீர்திருத்த எண்ணம் கொண்ட ஒரு அதிகாரத்துவவாதியாவார். 

தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விடைபெறும் போது 800 அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகளிடம்  "மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சொர்க்கம் பார்க்கிறது. வானமே அவருடைய கண்கள்." என்று லீ கூறினார்.

நாட்டிற்கு பங்களிக்கும் லட்சியத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த லீ, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ள பொலிட்பீரோ நிலைக்குழுவில் இருந்து கடந்த அக்டோபரில் வெளியேறிய ஒரு வருடத்திற்குள் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →