கோப்புப்படம் 
உலகம்

மொராக்கோவில் நிலநடுக்கம்: பிரதமர் மோடி இரங்கல்

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மொராக்கோவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் 

மொராக்காவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவெல்லாம் மொரோக்கோ மக்களுடன் இருக்கிறது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், உதவுவதற்கு இந்தியா எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை! ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பிரபல தாதா கைது!

SCROLL FOR NEXT