முகப்பு
உலகம்

மேற்குக் கரையில் இஸ்ரேலின் தாக்குதல்: 1600 பேர் கைது!

மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர் வீடுகளைத் தகர்த்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

Updated On : 31 அக்டோபர் 2023, 11:44 am IST
மேற்குக் கரையில் தாக்கப்பட்ட கடை
பகிர்:

காஸாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர்கள் உள்பட ஆதரவாளர் வீடுகளைத் தகர்த்து வருகிறது.

போர் ஆரம்பித்த முதல் வாரம் தொடங்கி இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் தொடர் சோதனைகளும் சந்தேகப்படுவோரை கைது செய்வதும் சுட்டுக் கொல்வதுமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்-அரூரியின் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது. அக்.7 தாக்குதலில் அவருக்கு பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018-ல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டாலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இல்லை. லெபனானில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement

ஐ.நா.வின் தரவுகளின் படி மேற்குக் கரையில் இதுவரை 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள விடியோவில் இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரை பகுதியில் சாலையில் வைத்து ஒரு இளைஞரைச் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “போர் நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது இஸ்ரேலை ஹமாஸிடமும் பயங்கரவாதத்திடமும் சரணடைய செய்வதற்கான அழைப்பு. அது நடக்காது. போரில் வெல்லும் வரை போராடுவோம்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments