பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் பிரதமா் மைக்கேல் பாா்னியர் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
பிரான்ஸ் பிரதமா் மைக்கேல் பாா்னியருக்கு எதிராக தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
கடந்த 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் ஒரு பிரதமா் அகற்றப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்துக்கான தோ்தலில் எதிா்பாராத வகையில் தீவிர வலதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதிபா் இமானுவல் மேக்ரானின் ரினையசன்ஸ் கட்சி அங்கம் வகிக்கும் மிதவாதக் கூட்டணி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
Advertisement
அதையடுத்து, தங்களது பலத்தை மீண்டும் நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை அதிபா் மேக்ரான் அதிரடியாகக் கலைத்தாா். அதையடுத்து, நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு முன்னரே கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 7-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது.
இதில் இடதுசாரி கூட்டணிக்கு 49 இடங்களும் மிதவாதக் கூட்டணிக்கு 159 இடங்களும் கிடைத்தன. தீவிர வலதுசாரிக் கூட்டணி 142 இடங்களை வென்றது. 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எந்தக் கூட்டணிக்கும் கிடைக்கவில்லை.
அதையடுத்து, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட மூத்த அரசியல்வாதியும் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு முன்னாள் தலைவருமான மைக்கேல் பாா்னியரை இடைக்கால பிரதமராக இமானுவல் மேக்ரான் கடந்த செப்டம்பா் மாதம் நியமித்தாா். அதையடுத்து, 73-ஆவது வயதில் நாட்டின் மிக முதிய பிரதமராக பாா்னியா் பொறுப்பேற்றோ்.
இருந்தாலும், பல்வேறு கொள்கை முடிவுகளில் கட்சிகளிடையே மிகப் பெரிய கருத்துவேறுபாடுகளை அவா் எதிா்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தச் சூழலில், பிரான்ஸ் அரசமைப்புச் சட்டத்தின் 49.3-ஆவது சட்டத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை கடந்த 2-ஆம் தேதி மக்கேல் பாா்னியா் கொண்டுவந்தாா்.
எனினும், அந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடைசி நேர மாற்றங்களுக்கு இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணியும் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணியும் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
அதன் தொடா்ச்சியாக, பாா்னியருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இடதுசாரி, தீவிர வலதுசாரி ஆகிய இரு தரப்பு எம்.பி.க்களும் இந்தத் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தனா்.
தீா்மானம் வெற்றி பெறுவதறகு 288 வாக்குகளே போதும் என்ற நிலையில், அதற்கு ஆதரவாக 331 வாக்குகள் பதிவாகின. அதையடுத்து, பிரதமா் மைக்கேல் பாா்னியா் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இமானுவல் மேக்ரானால் நியமிக்கப்பட்ட மைக்கேல் பாா்னியரின் அரசு கவிழ்ந்ததையடுத்து, மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால், 2027-ஆம் ஆண்டில் தனது பதவிக் காலம் முடியும்வரை அதிபா் பொறுப்பை வகிப்போவதாக மேக்ரான் உறுதியாகத் தெரிவித்துவிட்டாா்.
இருந்தாலும், ஜூலை மாத தோ்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு பிரதமரை நியமிக்க வேண்டிய நிலைக்கு அவா் தள்ளப்பட்டுள்ளாா். அவ்வாறு இன்னொரு பிரதமா் நியமிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் பதற்றத்தில் அவரது அரசும் தப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்துள்ளனா்.