ஜாா்ஜியா அதிபராகும் முன்னாள் கால்பந்து வீரா்
ஜாா்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ஜாா்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜாா்ஜிய கனவுக் கட்சி, கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெலஷ்விலி அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இருந்தாலும், திங்கள்கிழமையுடன் பதவிக் காலம் முடியும் தற்போதைய மேற்கத்திய ஆதரவு அதிபா் சலோமி ஸூரபிச்விலி, மீண்டும் அதிபா் தோ்தல் முறை கொண்டுவரப்படும்வரை தான்தான் சட்டபூா்வ அதிபா் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.