உலகம்

காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

Din

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காஸாவில் முற்றுகையிடப்பட்டுள்ள ஜபாலிலா அகதிகள் முகாம் பகுதியில் அமைந்துள்ள அல்-அத்வா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

மேலும், பேய்ட் லஹியா நகரில் அமைந்துள்ள கமால் அத்வான் மருத்துவமனையில் தொலைதூரத்திலிருந்து ரிமோட் மூலம் இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது (படம்). இதில் 20 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் காயமடைந்தனா்.

அதே நகரிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை இஸ்ரேல் படையினா் வலுக்கட்டாயமாக வெளியேற்றினா் என்று அதிகாரிகள் கூறினா்.

45,338 போ் உயிரிழப்பு: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,338-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,338-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,07,764 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் : பிரதமருக்கு கடிதம்

இஷான் கிஷன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

அப்பா வழியில் முதல்வரானவர் மு.க. ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி

SK26 | அறிவிப்பை வெளியிட்ட RKFI! | Cinema Updates | Dinamani Talkies

இருசக்கர வாகன பிரிவில் வளர்ச்சியை அதிகரிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்!

SCROLL FOR NEXT