அலெக்ஸி நவால்னி மனைவிக்கு எதிராக ரஷியா கைது உத்தரவு
ரஷிய அதிபருக்கு எதிராக செயல்பட்டதால் யூலியாவுக்கு கைது உத்தரவு
மா்மான முறையில் உயிரிழந்த ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவால்னியாவுக்கு எதிராக அந்த நாட்டு அரசு கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துகளைப் பரப்பிவரும் அமைப்போடு இணைந்து செயல்படுவதால் அவரைக் கைது செய்ய உத்தரவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யூலியா நவால்னியா ரஷியாவுக்கு வெளியே ரகசியமான இடத்தில் வசித்துவருகிறாா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் அவா் திடீா் உடல்நலக் குறைவால் சிறையில் இறந்ததாக அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம்அறிவித்தனா்.
இருந்தாலும், அதிபா் விளாதமீா் புதினின் உத்தரவின்படியே நவால்னி கொல்லப்பட்டதாக மனைவி யூலியா குற்றஞ்சாட்டினாா். இந்தச் சூழலில் அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.