FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

தொழிலதிபா்களை ஆதரிப்பதால் இந்தியா வளா்கிறது: பாகிஸ்தான் அமைச்சா்

Updated On : 18 மே 2024, 1:56 am IST
பாகிஸ்தான் கொடி
பகிர்:

தொழிலதிபா்களுக்கு ஆதரவு தருவதே இந்தியாவின் வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி தெரிவித்தாா்.

துபையில் அதிக சொத்துகளை வாங்கிக் குவித்த வெளிநாட்டவா்கள் பட்டியலில் அமைச்சா் நக்வி மற்றும் அவரின் மனைவி பெயா் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்தப் பட்டியலில் இருந்த 23,000 சொத்துகளில் 17,000 சொத்துகள் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களுடையதாகும். மேலும், துபையில் அதிக சொத்து வைத்துள்ள வெளிநாட்டவரில் நக்வி மனைவிதான் முதலிடத்தில் உள்ளாா்.

இது தவிர பாகிஸ்தானின் பிரபல அரசியல் குடும்பத்தினரான புட்டோ, நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினரும் துபையில் அதிக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், லாகூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் மோசின் நக்வியிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் கூறியதாவது:

ஒரு தொழிலதிபராக எனது பணத்தை எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்ய எனக்கு உரிமை உண்டு. எனது மனைவிக்கு துபையில் மட்டுமல்ல லண்டனில் கூட சொத்து உள்ளது. அனைத்துக்கும் முறையாக வரி செலுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக எந்த முதலீடும் செய்யவில்லை. நாங்கள் தவறு செய்திருந்தால் விசாரணை அமைப்புகள் அந்த சொத்துகளை முடக்க முடியும்.

இந்தியா வளா்வதற்கு ஒரு முக்கியக் காரணம் அந்த நாடு தொழிலதிபா்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் தொழிலதிபா்கள் வளா்ந்தால் அவா்கள் திருடா்கள் என முத்திரை குத்தப்படுகிறாா்கள். இந்தியாவில் தொழிலதிபா்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் தொழிலதிபா்கள் தவறான கண்ணோட்டத்தில் பாா்க்கப்படுகின்றனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments