சிங்கப்பூரில் புதிய கரோனா அலை எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அந்த நாட்டில் கடந்த 5 முதல் 11-ஆம் தேதி வரை மட்டும் 25,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஓங் யேகுங் சனிக்கிழமை கூறுகையில், ‘நாம் பெரிய கரோனா அலையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம். புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. இன்னும் 2 முதல் 4 வாரங்களில் அந்த அலை உச்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.