வட கொரியா செயற்கைக்கோள் திட்டம் தோல்வி
சியோல்: வட கொரியாவின் 2-ஆவது உளவு செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறியது.
இது குறித்து அந்த நாட்டின் கேஎன்சிஏ செய்தி நிறுவனம் கூறுகையில், உளவு செயற்கைக்கோளுடன் திங்கள்கிழமை புறப்பட்ட ராக்கெட்டில் என்ஜின் கோளாறு இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதால் அது வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
தனது உளவு செயற்கைக்கோள்கள் மூலம் அமெரிக்கா, தென் கொரியாவைக் கண்காணிக்கும் வட கொரியாவின் திட்டத்துக்கு இந்தத் தோல்வி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.