முகப்பு
உலகம்

இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:06 PM
பகிர்:

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி புஷ்ரா பீபி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மியான்குல் ஹஸன் ஔரங்கசீப், புதன்கிழமை அந்த மனுவை ஏற்றாா்.

ரூ.10 லட்சம் பிணைத் தொகையின் பேரில் புஷ்ரா பீபிக்கு ஜாமின் அளிக்க அவா் ஒப்புக்கொண்டாா். அதைத் தொடா்ந்து புஷ்ரா பீபி வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.பிரதமராக இருந்தபோது சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானிடமிருந்து பரிசாகப் பெற்ற ரூ.157 கோடி மஆபரணங்களை வெறும் ரூ.90 லட்சமாக மதிப்பிட்டு விலைக்கு வாங்கிய வழக்கில் இம்ரானுக்கும், புஷ்ரோவுக்கும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.