கோப்புப் படம் 
உலகம்

இந்தோனேசியா: சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு! 15 பேர் பலி!

கனமழையால் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு

DIN

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் பெய்த கனமழையின் காரணமாக சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது.

மேலும், நிலச்சரிவின்போது அந்த சுரங்கத்தில் 25 பேர் வரையில் பணியில் இருந்துள்ளனர். அவர்களில் 15 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். பிற தொழிலாளர்களில் 3 பேர் காயமடைந்தும், இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை தேடியும் வருகின்றனர்.

சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள், இயந்திரங்கள் ஏதுமின்றி கைகளாலேயே தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சாலை இல்லாத காரணத்தினால் 8 மணிநேரம் ஏற வேண்டியுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT