தீவிரவாதத்துக்கு இடமில்லை: இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 30) தொலைபேசியில் பேசினார் .
அப்போது, உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும் எனவும் மோடி உறுதியளித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,
Advertisement
Advertisement
''மேற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மேம்பாடுகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினேன். நமது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதையும், பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதையும் உறுதி செய்வது முக்கியமானது. அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும்'' என மோடி பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடானதொலைபேசி உரையாடலில் பேசியதாக வேறு எந்தப் பிரச்னைகள் குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிடவில்லை.
கடந்த வாரம் முழுக்க லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களான ஹசன் நஸ்ரல்லா, நபில் காவுக் உள்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் எக்ஸ் தளப் பக்கத்தில், இஸ்ரேலின் போர் விமானங்களின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் நபில் காவுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.