FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மியான்மர் நிலநடுக்கம்: இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் நிதியுதவி

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா உள்பட குவாட் நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன.

Updated On : 5 ஏப்ரல் 2025, 12:41 pm IST
மியான்மர் நிலநடுக்கத்தில் இடிந்து தரைமட்டமான கட்டடம் - AP
பகிர்:

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா உள்பட குவாட் நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன.

மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியில் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல் 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.7 புள்ளியாகப் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில், மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்துள்ளன.

Advertisement

Advertisement

மியான்மர் நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியதாக மியான்மர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உதவ இந்தியா சார்பில் என்டிஆர்எஃப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தியா சார்பில் மியான்மர் நாட்டின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 100 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments