இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.
காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் 15 போ் உயிரிழந்தனா். இத்துடன், அங்கு இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,912 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,15,891 போ் காயமடைந்துள்ளனா் என்று அமைச்சகம் தெரிவித்தது.
Advertisement
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை.